தனுஷ்கோடி பகுதியில் வீசும் பலத்த காற்று காரணமாக போதிய மீன் கிடைக்காமல் மீனவர்கள் ஏமாற்றம்

தனுஷ்கோடி பகுதியில் வீசும் பலத்த காற்று காரணமாக போதிய மீன் கிடைக்காமல் மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

Update: 2019-06-09 10:33 GMT
தனுஷ்கோடி பகுதியில் வீசும் பலத்த காற்று காரணமாக, போதிய மீன் கிடைக்காமல் மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர். ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாரம்பரிய மீனவர்கள் கரைவலை மீன்பிடியில் ஈடுபட்டு வருவதால், கடல் சீற்றம் காரணமாக போதிய மீன் கிடைக்காமல் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், கிடைத்த சிறிய வகை மீன்களை விற்பனைக்கு கொண்டு சென்றால் போதிய விலை கிடைப்பதில்லை என்றும் மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  
Tags:    

மேலும் செய்திகள்