வீரவநல்லூர் காவல் நிலையத்திற்குள் புகுந்த மலைப்பாம்பு

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலைய வளாகத்திற்குள் புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பை பிடித்த காவலர்கள் அதனை தொட்டி ஒன்றில் வைத்திருந்தனர்.

Update: 2019-06-08 11:35 GMT
நெல்லை மாவட்டம்  வீரவநல்லூர் காவல் நிலைய வளாகத்திற்குள் புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பை பிடித்த காவலர்கள் அதனை, தொட்டி ஒன்றில் வைத்திருந்தனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த   வனத்துறையினர் அதனை பத்திரமாக கொண்டு சென்று கொழுந்து மலை வனப்பகுதியில் விட்டனர். கடும் வறட்சி நிலவி வருவதால் மலைப்பாம்பு தண்ணீருக்காகவும் உணவுக்காகவும் ஊருக்குள் வந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்