பாலக்காடு- திருச்செந்தூர் பயணிகள் ரயில் 2 மணி நேரம் நிறுத்தம்

பாலக்காடு- திருச்செந்தூர் பயணிகள் ரயில் சிக்னல் கோளாறு காரணமாக பழனி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

Update: 2019-05-28 09:30 GMT
பாலக்காடு- திருச்செந்தூர் பயணிகள் ரயில் சிக்னல் கோளாறு காரணமாக பழனி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர். பாலக்காட்டில் இருந்து திண்டுக்கல் வழியாக காலை 8 மணிக்கு பழனி வந்த பயணிகள் ரயில் சிக்னல் கோளாறு காரணமாக சுமார் இரண்டு மணி நேரம் நிறுத்தப்பட்டது. சிக்னல் சரி செய்ய மேலும் கால தாமதம் ஆகும் என்பதால் பழனி நிலைய மேலாளர் முத்துசாமி ரயிலை இயக்குமாறு ஓட்டுநரிடம் எழுத்துப்பூர்வ கடிதம் அளித்தார். இதனையடுத்து ஓட்டுநர் ரயிலை இயக்கி சென்றார்.
Tags:    

மேலும் செய்திகள்