தமிழகத்தில் பாஜக காலூன்றவே முடியாது - மகேந்திரன்

பணப்பட்டுவாடா செய்யும் இடங்களில் சோதனை செய்யாமல், மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகங்களில் சோதனைச் செய்யப்படுவதாக அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் விமர்​சித்துள்ளார்.

Update: 2019-05-18 21:12 GMT
பணப்பட்டுவாடா செய்யும் இடங்களில் சோதனை செய்யாமல், மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகங்களில் சோதனைச் செய்யப்படுவதாக அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் விமர்​சித்துள்ளார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடுக்கி விழுந்தாலும் பணப்பட்டுவாடா நடக்கும் இடங்களுக்கு செல்லாமல், மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் சோதனை செய்வதாக குற்றம்சாட்டினார். மக்கள் மனதில் தங்கள் கட்சி மீது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கே சோதனை நடத்தப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார். தேர்தல் முடிவுகள், மத்திய, மாநில அரசுகளுக்கு ஒரு பாடமாக அமையும் என்றும், தமிழகத்தில் பா.ஜ.க. எப்போதும் காலூன்ற முடியாது என்றும் திட்டவட்டம் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்