நடன கலைஞர் பரத் தற்கொலை... மன உளைச்சலில் விபரீத முடிவு

சென்னை விருகம்பாக்கத்தில் பிரபல நடிகரும், நடன கலைஞருமான பரத் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-05-16 11:52 GMT
விருகம்பாக்கத்தில், நண்பர்களுடன் வசித்து வந்த நடன கலைஞர் பரத், கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. விரக்தியின்உச்சத்திற்கு சென்ற பரத், வீட்டில் நண்பர்கள் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து பணியாற்றி வந்த பரத், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் பிள்ளைகளுக்கு நடன பயிற்சி அளித்து வந்ததாக தெரிகிறது. ஆன்மிகம் மற்றும் நடனத்தில் கவனம் செலுத்தி வந்த பரத்தின் மறைவு தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு என நண்பர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்