திருச்செந்தூர் கோவிலில் குவியும் கூட்டம் : கடலில் விளையாடி மகிழும் சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறையை கொண்டாட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருச்செந்தூர் கோவிலுக்கு சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர்

Update: 2019-05-14 21:27 GMT
கோடை விடுமுறையை கொண்டாட  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருச்செந்தூர் கோவிலுக்கு, சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர்.கோடை விடுமுறையை ஆன்மீக சுற்றுலாவாக கருதி தமிழகத்தின் பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று ஏராளமானோர் வழிபாடு நடத்தி வருகின்றனர். அது போல திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து  சாமி தரிசனம் செய்தனர். பின்னர், கடற்கரையில் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் பல மணி நேரம் கடலில், அலையோடு விளையாடி மகிழ்ந்தனர். இந்த கோடை காலத்தில் கடலில் குளித்து விளையாடுவதால் வெப்பத்தின் தாக்கமே தெரியவில்லை என, சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் தெரிவித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்