உரிய வயதை எட்டாத மாணவிக்கு திருமணம் : மாணவியை மீட்டு அழைத்து சென்ற அதிகாரிகள்

தருமபுரி அருகே குழந்தை திருமணம் செய்த மாணவியை மீட்ட சைல்டு லைன் குழுவினரை உறவினர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-05-11 09:28 GMT
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பவளந்தூர் கிராமத்தை சேர்ந்த பதினோராம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு பெற்றோர்கள் ரகசியமாக திருமணம் செய்து வைத்துள்ளனர். இது தொடர்பாக தொலைபேசி மூலம் சைல்டு லைன் குழுவினருக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற மாவட்ட சைல்டு லைன் குழுவினர், திருமண வயதை எட்டாத அந்த மாணவியை மீட்டு குறிஞ்சி நகரில் உள்ள காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். 

அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பேருந்தில் சென்ற போது, அங்கு வந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சைல்டு லைன் குழுவினரை சரமாரியாக தாக்கி விட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் மாணவியை அவர்கள் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சைல்டு லைன் குழுவினர், இந்த சம்பவம் பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்