சென்னை கோயம்பேட்டில் வலிப்பு வந்தவரை எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா காப்பாற்ற முயன்ற காட்சி

சென்னை கோயம்பேட்டில் இரு நபர்களுக்கு இடையே நடந்த தகராறின் போது ஒருவர் வலிப்பு வந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Update: 2019-05-09 02:50 GMT
சென்னை கோயம்பேட்டில் இரு நபர்களுக்கு இடையே நடந்த தகராறின் போது ஒருவர் வலிப்பு வந்து  சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அப்போது வலிப்பு வந்தவரை காப்பாற்ற பிரான்சிஸ் கிருபா என்ற எழுத்தாளர் முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், உயிரிழந்த நபர் குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில். உடலின் அருகே இருந்த எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபாவை சந்தேகத்தின் பேரில் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். இந்த சம்பவம், இலக்கிய வட்டாரத்திலும், சினிமா துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வலிப்பு வந்து மாரடைப்பு ஏற்பட்டு இயற்கையாவே அந்த நபர் உயிரிழந்தது தெரியவந்ததையடுத்து பிரான்சிஸ் கிருபாவை போலீசார் விடுவித்தனர். இந்நிலையில் அந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில், பிரான்சிஸ் கிருபா வலிப்பு வந்தவருக்கு உதவ முயன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்