மகனை தாக்கியதால் பா.ஜ.க. நிர்வாகி ஆத்திரம் - எஸ்.ஐ.க்கு வெட்டு

தனது மகனை தாக்கிய சுபாஷை வெட்ட முயன்றபோது உதவி ஆய்வாளர் சிவகுமார் வலது கையில் வெட்டு விழுந்தது.

Update: 2019-05-05 20:17 GMT
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சாலக்கடை தலைக்காடு பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் குடிபோதையில், 
பா.ஜ.க. முன்னாள் மாவட்ட செயலாளர் கணேசனின் மகன் பிரகாஷை வழிமறித்து தாக்கியுள்ளனர். இதை கண்டகாவல் உதவி ஆய்வாளர் சிவகுமார் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து விரைந்து சென்ற உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தகராறில் ஈடுபட்ட சுபாஷ் என்பவரை பிடித்து, இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்றனர். அப்போது இடையில் வழமறித்த கணேசன் தனது மகனை தாக்கிய, சுபாஷை வெட்ட முயன்றுள்ளார். ஆனால் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த உதவி ஆய்வாளர் சிவகுமார் வலது கையில் வெட்டு விழுந்தது. காயமடைந்த அவரை உடனடியாக மேல் சிகிச்சைக்காக திருவாருர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்