கள்ள துப்பாக்கியுடன் சுற்றி வந்த போலி வழக்கறிஞர்

திருச்சியில் கள்ள துப்பாக்கியுடன் சுற்றி வந்த போலி வழக்கறிஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2019-04-27 02:25 GMT
திருச்சியில் கள்ள துப்பாக்கியுடன் சுற்றி வந்த போலி வழக்கறிஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது முகமது தாவர் அலி என்பவரின் ஆவணங்களை சோதனையிட முற்பட்ட போது தாம் ஒரு வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவரிடம் துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது. மேலும் அவர் அபராதமாக செலுத்திய ரூபாய் நோட்டுகள் குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் சோதனை மேற்கொண்ட போது அது கள்ள நோட்டுக்கள் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு அவரை போலீசார் அழைத்து சென்று நடத்திய விசாரணையில், அவர் போலி வழக்கறிஞர் என தெரியவந்தது. இதனையடுத்து முகமது தாவர் அலியை கைது செய்து போலீசார், சிறையில் அடைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்