நண்பனுக்கு கல்லூரி மாணவியை விருந்தாக்கிய காதலன்

நண்பனுக்கு விருந்தாக்கிய காதலனையும், அவனது நண்பனையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2019-04-24 11:18 GMT
நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவிக்கு, பேஸ்புக் மூலம் எசுநேசன் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளியான எசுநேசன், மாணவியை காதலிப்பதாக கூறியுள்ளார். முதலில் மறுத்த மாணவி, எசுநேசனின் வற்புறுத்தலால் காதலை ஏற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவியை நேரில் சந்திக்க விரும்புவதாக கூறி, எசுநேசன் நாகர்கோவில் அருகில் உள்ள வெள்ளமடம் பகுதிக்கு காரில் வந்துள்ளார். மாணவியை காரில் ஏற்றிக் கொண்டு ஆவரைகுளம் நோக்கி அவர் புறப்பட்டுள்ளார். வழியில் அதீஸ் என்ற இளைஞரும் காரில் ஏறியுள்ளார். மாணவிக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, அதீஸ் தனது நண்பர் எனக்கூறி எசுநேசன் சமாதானப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, மாணவியை ஆற்றங்கரை பள்ளிவாசல் அருகில் உள்ள தனியார் விடுதிக்கு கொண்டு சென்ற எசுநேசன், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, தனது நண்பன் அதீஸுக்கும் விருந்தாக்கியுள்ளார். இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்த மாணவி, மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து, காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு எசுநேசன், அதீஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்