2004 ஆம் ஆண்டு தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்திய காவலர், எம்.ஜி.ஆர் வேடமணிந்து நூதனப் பிரசாரம்

2004 ஆம் ஆண்டு தேர்தலின்போது, அதிமுக வெற்றி பெற வேண்டி விரல்களை வெட்டி காணிக்கை செலுத்திய காவலர், தற்போது எம்ஜிஆர் வேடத்தில் நூதன பிரசாரம் செய்து வருகிறார்.

Update: 2019-04-13 23:45 GMT
2004 ஆம் ஆண்டு தேர்தலின்போது, அதிமுக வெற்றி பெற வேண்டி விரல்களை வெட்டி காணிக்கை செலுத்திய காவலர், தற்போது எம்ஜிஆர் வேடத்தில் நூதன பிரசாரம் செய்து வருகிறார். சேலம் மாவட்டம் காரிப்பட்டியைச் சேர்ந்த ரத்தினம்.  எம்ஜிஆரின் தீவிர ரசிகர். 2004ஆம் ஆண்டை போலவே, 2006 ஆம் ஆண்டு தேர்தலின்போதும் அதிமுக வெற்றி பெற வேண்டி ஒரு விரலை வெட்டிக் கொண்டார். பணியில் இருந்த காலத்தில் ஒழுங்கீனமாக நடந்து, காவல்துறை விதிகளை மீறி செயல்பட்டதாக  ரத்தினம் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டில் அவர் ஓய்வுபெற்ற நிலையில், 2011 ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா உத்தரவின் பேரில் அனைத்து பணி பயன்களும் கிடைத்தன. தற்போது, ரத்தினம்,  எம்ஜிஆர் வேடம் அணித்து  இரு சக்கர வாகனத்தில் நூதனப் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்