20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை - செருப்பிடம் மனு கொடுத்த கிராம மக்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் நயினார் குப்பத்தில், கடந்த 20 ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை எனக் கூறி கிராம மக்கள் செருப்பிடம் மனு கொடுத்தனர்.

Update: 2019-03-31 08:35 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் நயினார் குப்பத்தில், கடந்த 20 ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை எனக் கூறி கிராம மக்கள் செருப்பிடம் மனு கொடுத்தனர். மேலும், ஓட்டு போட மனசு இல்லை எனக்கூறி வீடு மற்றும் வீதிகளில் கருப்புக்கொடி ஏற்றியும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பகுதிக்கு வந்த அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் அனைத்து வசதிகளையும் செய்த தருவாக கூறி வாக்கு சேகரித்தார். அப்போது மக்கள், இதுவரை வாக்களித்தும், தங்களுக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை என்றும், சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் இந்த முடிவுக்கு வந்ததாக குற்றம் சாட்டினர்.    
Tags:    

மேலும் செய்திகள்