சிதம்பரம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் திருமாவளவன்
சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் தொல் திருமாவளவன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்
நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன்,இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலையில், தேர்தல் அதிகாரி விஜயலட்சுமியிடம் அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொல் திருமாவளவன்,5-வது முறையாக சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது