சிவகங்கை : பள்ளி வாகனத்தில் மாணவிகள் திடீர் மயக்கம்...

சிவகங்கை சோழபுரத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி வாகனம் ஒன்று மாணவிகளை அழைத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தது.

Update: 2019-03-23 13:32 GMT
சிவகங்கை சோழபுரத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி வாகனம் ஒன்று மாணவிகளை அழைத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தது. ஒக்கூர் என்ற இடத்தில் வந்த போது, அதிலிருந்த மாணவிகள் அடுத்தடுத்து 3 மாணவிகள் மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மாணவிகள் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவகல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்து வந்த 50க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அளவுக்கு அதிகமாக மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்ததால் தான் அவர்கள் மயக்கம் அடைந்த தாக அவர்கள் குற்றம் சாட்டினர். 
Tags:    

மேலும் செய்திகள்