புல்லட் வாகனத்தில் முருகப்பெருமான்...
புதுச்சேரி அருகே பிள்ளையார்க்குப்பம் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி அருகே பிள்ளையார்க்குப்பம் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா கொண்டாடப்பட்டது. இதன் முக்கிய நிகழ்ச்சியான செடல் உற்சவ விழாவை முன்னிட்டு, பக்தர்கள் அலகு குத்தியபடி, கிரேன், பொக்லைன், நெல் அறுவடை வாகனங்களில் தொங்கியவாறு வீதி உலா வந்தனர். முருகப்பெருமான் தலைக்கவசத்துடன் புல்லட் வாகனங்களில் வீதி உலா வந்தது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.