மேச்சேரி அருகே தேர்தல் புறக்கணிப்பு தட்டியால் பரபரப்பு

கடந்த தேர்தல்களின் போது, சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள அரங்கனூர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது

Update: 2019-03-21 04:32 GMT
கடந்த தேர்தல்களின் போது, சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள அரங்கனூர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், பொது மக்கள் சார்பில் வைக்கப்பட்டு உள்ள தேர்தல் புறக்கணிப்பு தட்டியால் அங்கு பரபரப்பு உருவாகியுள்ளது. மேட்டூர் வருவாய்த் துறை அதிகாரிகள் சமரசத்தை ஏற்க மறுத்த பொது மக்கள், தட்டியை அகற்ற மறுத்துவிட்டனர். தி.மு.க.,அ.தி.மு.க., பா.ம.க.வை சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எந்தவொரு அடிப்படை வசதியும் தங்கள் கிராமத்துக்கு செய்து கொடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்