முதல் மனைவிக்கு தெரியாமல் 2 வது திருமணம் - பரபரப்பு - வாக்குவாதம்

கரூரில் இரண்டாவது திருமணம் செய்து வரவேற்பு நிகழ்ச்சி நடத்திய போது முதல் மனைவியின் குடும்பத்தினர் திருமண அரங்கிற்கு சென்று தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-03-12 03:12 GMT
கரூரில் இரண்டாவது திருமணம் செய்து வரவேற்பு நிகழ்ச்சி நடத்திய போது முதல் மனைவியின் குடும்பத்தினர் திருமண அரங்கிற்கு சென்று தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் வேலுச்சாமி புரத்தைச் சேர்ந்த பத்மபிரியா என்பவருக்கும் திருவாரூர் மாவட்டம் சேங்களாபுரத்தை சேர்ந்த பாலாஜி  என்பவருக்கும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி கரூரில் நடைபெற்றது. அப்போது அங்கு சென்றவர்கள்,   ஏற்கனவே பாலாஜிக்கும் அபிராமி என்ற பெண்ணுக்கும் ஏற்கனவே திருமணம் நடைபெற்றதாகவும், 3 வயதில் குழந்தை இருப்பதாகவும்  கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான புகாரின் பேரில் இருதரப்பினரிடமும் கரூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்