சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் : முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு நன்றி கடிதம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எம்ஜிஆர் பெயரில் அழைக்கப்படும் எனும் பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-09 03:25 GMT
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எம்ஜிஆர் பெயரில் அழைக்கப்படும் எனும் பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, எம்ஜிஆர் பெயர் சூட்ட வேண்டும் என தமிழக அமைச்சரவை முடிவெடுத்து, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ததை சுட்டிக்காட்டியுள்ளார். அதனை ஏற்று, கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இந்த அறிவிப்பை வெளியிட்டதற்கு பிரதமருக்கு, மனமார்ந்த நன்றியை முதலமைச்சர் பழனிசாமி, கடிதம் மூலம் கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்