களைகட்டிய மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி

நீலகிரி ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா பங்கேற்று நடனம்

Update: 2019-03-08 13:28 GMT
உதகை அரசுத் தாவரவியல் பூங்காவில் மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்துகொண்டார். கேக் வெட்டி கொண்டாடப்பட்ட இவ்விழாவில் பழங்குடியினரின் பாரம்பரிய  நடனம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப் பெற்றன, இதில் படுகர்,  தோடரின இன மக்களின்  நடனத்தில் பெண்களுடன் மாவட்ட ஆட்சியர் திவ்யாவும் கலந்துகொண்டு உற்சாக நடனமாடினார். மேலும் பாரம்பரிய உணவான ராகி, கேழ்வரகு, சாமை, திணை, கோதுமை ஆகிய  பாரம்பரிய உணவுகள் தயாரிக்கப்பட்டு  சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில் அதிமுக ராஜசபா உறுப்பினர் கே.ஆர் அர்ஜுனன், குன்னூர் MLA சாந்திராமு உள்ளிட்ட பலர் கலந்துகொடண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்