சபாநாயகரை அவதூறாக பேசிய வழக்கு - எம்எல்ஏ ரத்தினசபாபதிக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமின்

சபாநாயகர் மற்றும் அரசு கொறடா ஆகியோரை மிரட்டும் வகையில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தின சபாபதி பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது

Update: 2019-03-07 12:36 GMT
சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில், சபாநாயகர் மற்றும் அரசு கொறடா ஆகியோரை மிரட்டும் வகையில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தின சபாபதி பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் தனக்கு முன் ஜாமின் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் ரத்தினசபாபதி தாக்கல் செய்திருந்த மனு,  நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார் அளித்தவரும், குற்றம் சாட்டப்பட்டவரும்  ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஒன்று சேர்வார்கள். ஆகவே, கைது செய்ய வேண்டிய அவசியமில்லை எனக்கூறி, ரத்தினசபாபதிக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்
Tags:    

மேலும் செய்திகள்