கச்சத்தீவு திருவிழா : நாட்டு படகுகள் தரமானதாக உள்ளதா? - படகுகள் ஆய்வு

கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு செல்ல உள்ள நாட்டு படகுகள், தரமானதாக உள்ளதா? என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2019-03-07 08:07 GMT
கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு செல்ல உள்ள நாட்டு படகுகள், தரமானதாக உள்ளதா? என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வருகின்ற 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் திருவிழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உள்ள தமிழக மீனவர்கள், நான்கு ஆண்டுகளாக கோரிக்கை வைத்து, நாட்டு படகில் செல்வதற்கு நீதிபதி அனுமதியை பெற்றுள்ளனர். இந்நிலையில், சென்னையில் இருந்து சென்ற பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள், படகுகளின் தரம் குறித்து ஆய்வு செய்த‌னர். 12 படகுகள் தயார் நிலையில் உள்ளதாகவும், முதல் முறையாக நாட்டு படகில் பயணம் மேற்கொள்வதால், பெண்கள் குழந்தைகளை தாங்களே தவிர்த்துள்ளதாகவும், மீனவ சங்க தலைவர் அருள் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்