கொரியர் அலுவலகத்தில் ரூ.3 லட்சம் கொள்ளை : திருட்டில் ஈடுபட்ட ஊழியர் கைது

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூ​ரில் உள்ள தனியார் கூரியர் அலுவலகத்தில் 3 லட்சம் ரூபாய் கொள்ளை போனது.

Update: 2019-03-06 03:47 GMT
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூ​ரில் உள்ள தனியார் கூரியர் அலுவலகத்தில் 3 லட்சம்  ரூபாய் கொள்ளை போனது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கூரியர் அலுவலகத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த  சேக்பரித் என்ற ஊழியர் பணத்தை திருடியது, தெரியவந்தது. இதனையடுத்து சேக்பரித்தை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்