வலைதளங்களில் அவதூறு கருத்துகள் நீக்கப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி சாகு
சமூக வலைதளங்களில் வேட்பாளர்களையோ கட்சிகளையோ விமர்சித்து அவதூறு பரப்பினால், அந்த பதிவை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கும் திட்டம் குறித்து தேர்தல் ஆணையம் ஏதேனும் பரிந்துரை செய்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ள சாகு, அதற்கு முன்பாக தமிழக அரசிடம் திட்டம் குறித்து விளக்கம் கேட்கப்படும் என்றார். இரட்டை பதிவுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகவதாகவும், வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்க 7 லட்சம் விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றுவருவதாகவும், அவர் தகவல் தெரிவித்துள்ளார்.