சென்னை விமானநிலையம் : வெளிநாட்டு பயணிகளிடம் டிரோன் கேமரா பறிமுதல்
சென்னை விமானநிலையத்தில் வெளிநாட்டு பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் டிரோன் கேமரா பறிமுதல் செய்யப்பட்டது.;
சென்னை விமானநிலையத்தில் வெளிநாட்டு பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் டிரோன் கேமரா பறிமுதல் செய்யப்பட்டது. நார்வேயை சேர்ந்த மார்டன் என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், டிரோன் கேமரா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த வெமோ வென்கய் என்பவரிடம் இருந்தும் ஒரு டிரோன் கேமரா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரின் பயணமும் ரத்து செய்யப்பட்டு விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.