திருச்சி மத்திய சிறையில் இலங்கை தமிழர் திடீர் உண்ணாவிரதம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இலங்கை தமிழர் நிமலன் என்பவர் திடீர் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளார்.

Update: 2019-03-03 17:41 GMT
திருச்சி மத்திய சிறை வளாகத்தில்  இலங்கை தமிழர் நிமலன் என்பவர்  திடீர் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளார். நிமலன் சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றதாக 2016 -ல் பொள்ளாச்சியில் கைது செய்யப்பட்டவர். இந்நிலையில் தன்னை பொய் வழக்கில் கைது செய்து சித்திரவதை செய்து வருவதாக நிமலன் குற்றம் சாட்டியுள்ளார்.  தன்னை விடுதலை செய்யும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்றும் நிமலன் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்