இலங்கை சிறையில் உள்ள 46 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

இலங்கைச்சிறையில் உள்ள 46 மீனவர்களையும், 26 மீன்பிடி படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதலமைச்சர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2019-02-27 02:57 GMT
இலங்கைச்சிறையில் உள்ள 46 மீனவர்களையும், 26 மீன்பிடி படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதலமைச்சர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 9 ஆம் தேதி, மீன் பிடித்து கொண்டிருந்த 7 நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 2 மாதங்களாக ராமநாதபுரம்,  தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 46 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்