தமிழக பகுதிகளில் ஆதி மனிதர்கள் வாழ்ந்தது நிரூபணம் ஆனது - தொல்லியல்துறை ஆணையர் உதயச்சந்திரன்

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே தொல்லியல் துறை சார்பில் கல்வெட்டியல் மற்றும் பயிலரங்க தொடக்க விழா நடைபெற்றது.

Update: 2019-02-26 04:20 GMT
சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே தொல்லியல் துறை சார்பில் கல்வெட்டியல் மற்றும் பயிலரங்க தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், திருவள்ளுர் மாவட்டம் சத்யபாக்கம் என்ற இடத்தில் ஆதிமனிதர்கள் பயன்படுத்திய கற்கால கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும், இவை 15 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் அவர் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்