பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை : மர்ம கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை

நாகையில் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-02-25 20:59 GMT
நாகை மாவட்டம் பாப்பாகோவிலை சேர்ந்த பிரபல ரவுடி தவக்களைசெந்தில் கோட்டைவாசல்படி நடராஜபிள்ளை தெரு அருகே நடந்து சென்ற போது, காரில் வந்த ஒரு மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தவக்களைசெந்திலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்