அனைத்து கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் நூதன போராட்டம்

அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், விவசாயிகள் பட்டம் விடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-25 13:23 GMT
அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், விவசாயிகள் பட்டம் விடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் விவசாய கடன்களை உடனடியாக கட்ட வங்கிகள், நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுப்பதாகவும், இதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். மத்திய அரசு வழங்கும்
 6 ஆயிரம் ரூபாய் நிதி பெறுவதற்கான விதிகளை தளர்த்த வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்