சந்தியா கொலை வழக்கு : உடல் பாகங்கள் கிடைக்கவில்லை - சென்னை மாநகர காவல் ஆணையர்
சந்தியா கொலை வழக்கில் தலை மற்றும் மீதமுள்ள உடல் பாகங்கள் கிடைக்கவில்லை என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சந்தியா கொலை வழக்கில் தலை மற்றும் மீதமுள்ள உடல் பாகங்கள் கிடைக்கவில்லை என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சந்தியாவின் உடல் பாகங்களை தீவிரமாக தேடி வருவதாக அவர் கூறினார். குற்றச்செயல்களை தடுக்கும் வகையில், சென்னை முழுவதும் 50 மீட்டருக்கு ஒரு சிசிடிவி கேமரா பொருத்தப்படும் எனவும் விஸ்வநாதன் தெரிவித்தார்.