கரும்புகளை மேய்ந்துவிட்டு உறங்கிய சின்னதம்பி...

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியிலிருந்து கிருஷ்ணாபுரம் சர்க்கரை ஆலை பகுதியில் சின்னதம்பி யானை முகாமிட்டுள்ளது.

Update: 2019-02-08 23:16 GMT
உடுமலையில் சின்னத்தம்பி பதுங்கியிருந்த முள்காடு பகுதியை அதிகாரிகள் அழித்ததால், அங்கிருந்து மடத்துக்குளம் வழியாக அமராவதி ஆற்றை கடந்து, கண்ணாடிபுத்தூர் பகுதி கரும்பு காட்டில் சின்னதம்பி தஞ்சம் புகுந்தது. அங்கு, கரும்பு மற்றும் நெல் பயிற்களை மேய்ந்து விட்டு கரும்பு காட்டில் நேற்று மாலை வரை உறங்கியது. பின்னர்,  அருகிலிருந்த வாழை தோட்டத்தில் புகுந்து வாழையை ருசி பார்த்த சின்னத்தம்பி, நேற்று இரவு, அங்குள்ள தென்னந்தோப்பில் தஞ்சமடைந்துள்ளது. யானை செல்லும் இடமெல்லாம் பின் தொடரும் வனத் துறையினர், சரியான சந்தர்ப்பத்தில் அதை வனப்பகுதிக்கு அனுப்ப காத்திருக்கின்றனர். ஆனால், அதற்கு இடம் கொடுக்காமல் இடங்களை மாற்றியபடி சுற்றித் திரியும் சின்னத்தம்பியின் செய்கையால், வனத்துறையினர் திகைத்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்