தமிழகத்தில் ஒரே கட்டமாக மார்ச் 10 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் ஒரே கட்டமாக மார்ச் 10 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Update: 2019-02-08 10:23 GMT
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், சென்னை அரசு மருத்துவ கல்லூரி சார்பாக கண்டுபிடிக்கப்பட்ட கை சுத்திகரிப்பானை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிமுகம் செய்து வைத்தார். மேலும், கல்லீரல், பித்தப்பைக்கான அதிநவீன கதிரியல் தொகுப்பகம் மற்றும் தியான கூடம் ஆகியவற்றையும் அவர், திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் ஒரே கட்டமாக மார்ச் 10 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்