5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி கரூர் மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2019-02-06 20:12 GMT
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி கரூர் மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மாயனூர் பகுதியை சேர்ந்த முத்துசாமி கடந்த 2018ல் அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் முத்துசாமி கைது செய்யப்பட்டார். கரூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி சசிகலா, முத்துசாமிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து முத்துசாமி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்... 
Tags:    

மேலும் செய்திகள்