சின்னத்தம்பி செயல்பாடுகள், உடல் நிலை குறித்து புதிய தகவல்

திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் முகாமிட்டுள்ள யானை சின்னத்தம்பியின் நடவடிக்கைகளை மயக்க மருந்து நிபுணர் ஆய்வு செய்துள்ளார்.

Update: 2019-02-05 02:17 GMT
யானை சின்னத்தம்பி நலமுடன் இருப்பதாக மயக்க மருந்து அளித்த மருத்துவர் கூறியுள்ளார். இந்த நிலையில் சின்னத்தம்பியை கட்டுப்படுத்தும் பணிக்காக கொண்டு வரப்பட்டுள்ள கலீம், மாரியப்பன் என இரண்டு கும்கி யானைகளுடன் சின்னத்தம்பி சகஜமாக பழகிவருவதால் வனத்துறை அடுத்த கட்ட முயற்சிகளில் இறங்கியுள்ளது. நேற்று மாலை புதரிலிருந்து வெளியேறி கரும்பு தோட்டத்திற்குள் சென்றுள்ள நேரத்தைப் பயன்படுத்தி, இதுவரை தங்கி வந்த முட்புதரை ஜேசிபி மூலம் அழித்தனர். இதனால் வசதியான தங்கும் இடம் இல்லாமல் வனபகுதியை நோக்கி சின்னத்தம்பி செல்லும் என  வனத்துறை அதிகாரிகள் கூறினர். தொடர்ந்து கிருஷ்ணாபுரம் பகுதியிலேயே முகாமிட்டுள்ள சின்னத்தம்பியை கண்காணிக்கும் பணியில் 150 க்கும்  மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்