பிரியாணி கடைக்காரர் ஓட ஓட வெட்டி கொலை...

சென்னையில் பட்டப்பகலில் பிரியாணி கடை வியாபாரி ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-02-03 21:15 GMT
சென்னையில் பட்டப்பகலில் பிரியாணி கடை வியாபாரி ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தண்டையார்பேட்டை காவல் நிலையம் அருகே பிரியாணி கடை நடத்தி வரும் ரவி என்பவர், காய்கறி வாங்குவதற்காக சந்தைக்கு சென்றபோது, அவரை வழிமறித்த மூவர் கும்பல், சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரியாணி வாங்கி விட்டு, பணம் தர மறுத்தது  தொடர்பாக, அந்த பகுதி ரவுடி ரேடியோ விஜய் என்பவருக்கும் ரவிக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், அதற்கு பழி தீர்க்கவே ரவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர்.  
Tags:    

மேலும் செய்திகள்