2019 உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி - முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்

2019 உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி அடைந்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-24 12:28 GMT
2019 உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி அடைந்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றிய அவர்,மாநாடு வெற்றி பெறுவதற்காக உழைத்த அமைச்சர் சம்பத், மற்றும் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். பின்னர், இந்த மாநாடு மூலம், தமிழகத்திற்கு 3 லட்சத்து 431 கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளதாகவும், இதன் மூலம் 10 லட்சத்து 50 ஆயிரம் வேலை வாய்ப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி கூறினார். மேலும், அடுத்த மாநாடு 2021 ஆம் ஆண்டு நடைபெறும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்