வைகோ படித்த பள்ளியில் ஆண்டு விழா - மாணவ பருவ நினைவுகளை பகிர்ந்த வைகோ

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வைகோ வின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

Update: 2019-01-22 22:12 GMT
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வைகோ வின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் அப்பள்ளியின் முன்னாள் மாணவரும் , மதிமுக பொதுச்செயலாருமான வைகோ கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தாம் அப்பள்ளியில் படிக்கும் போது மின்விளக்கு இன்றி அரிக்கேன் விளக்கு ஒளியில் படித்ததாக தெரிவித்தார். ஆசிரியர்கள் நீதி கதைகளை கற்பித்ததாக தமது மாணவ பருவ நினைவுகளை பகிர்ந்தார். தமது சொந்த ஊரான கலிங்கப்பட்டி மிகவும் பிடித்த ஊர் என்றும் வைகோ தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்