மாநில அளவிலான ஆணழகன் போட்டி - வீர‌ர்கள் பங்கேற்பு

சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 150 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

Update: 2019-01-21 04:23 GMT
சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 150 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். 55 கிலோ முதல் 90 கிலோ வரையிலான எடை பிரிவுகளின் அடிப்படையில் போட்டி நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற வீர‌ர்கள், உடற்கட்டுகளை பல்வேறு விதமாக வெளிக்காட்டி பார்வையாளர்களை கவர்ந்த‌னர். வெற்றி பெற்ற வீர‌ர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் மூன்று இடங்களை பிடித்த வீர‌ர்கள் ,  மார்ச் மாதம் சென்னையில் நடைபெற உள்ள தேசிய அளவிலான ஆணழகன் போட்டியில் பங்கேற்க உள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்