வேலை நிறுத்தம் வாபஸ் பெற்ற பின்பும் தொடரும் சோகம் : இலங்கை கடற்படையால் மீனவர்கள் அச்சம்

இலங்கை கடற்படைக்கு அஞ்சி மீனவர்கள் கடலுக்கு செல்லாத‌தால், ராமேஸ்வரம் கடற்கரையில் மீன்பிடி படகுகள் அணிவகுத்து நிற்கின்றன.

Update: 2019-01-19 09:03 GMT
இலங்கை கடற்படைக்கு அஞ்சி மீனவர்கள் கடலுக்கு செல்லாத‌தால், ராமேஸ்வரம் கடற்கரையில் மீன்பிடி படகுகள் அணிவகுத்து நிற்கின்றன. கடந்த 12 ஆம் தேதி இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் உயிரிழந்த மீனவர் கலையரசனுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாகவும், இலங்கை கடற்படையை கண்டித்தும், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்த‌த்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், அவரது உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் நிவராணமும் அறிவித்ததை  அடுத்து மீனவர்கள் தங்களது வேலை நிறுத்த‌த்தை வாபஸ் பெற்றிருந்த‌னர். இருந்தபோதும், இலங்கை கடற்படையினரின் அட்டகாசத்தால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அஞ்சுவதால் ராமேஸ்வரம் பகுதியில் படகுகள் அணிவகுத்து நிற்கின்றன.
Tags:    

மேலும் செய்திகள்