"குழந்தைகளை குறிவைக்கும் புகையிலை நிறுவனங்கள்" - அன்புமணி குற்றச்சாட்டு

புகையிலை பொருட்கள் குழந்தைகளை குறிவைத்து விற்கப்படுவதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2019-01-18 08:59 GMT
புகையிலை பொருட்கள் குழந்தைகளை குறிவைத்து விற்கப்படுவதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளுக்கு அருகாமையில், புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். எனவே புகையிலை விற்கும் கடைகளில், குழந்தைகளுக்கு விருப்பமான பொம்மைகள், மிட்டாய்கள் உள்ளிட்ட எந்த பொருட்களும் விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்