அண்ணா பல்கலை. முன்பு மாணவர்கள் போராட்டம்

சென்னை, அண்ணா பல்கலைக்கழகம் முன்பு மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-01-18 08:54 GMT
2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய தேர்வு முறையில் கொண்டு வந்த மாற்றத்தை கைவிட வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார், சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.



" மாணவர்கள் கோரிக்கை தொடர்பாக 10 நாட்களில் முடிவு " -  அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் தகவல்



மாணவர்கள் போராட்டம் வாபஸ் :

இதனிடையே, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கோரிக்கையை ஏற்று, மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். பத்து நாட்களில் அண்ணாபல்கலைக்கழகம் உரிய முடிவை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்