வரையாடுகளின் பிரசவ காலம் : ராஜமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

தேனி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமலையில், வரையாடுகளின் பிரசவ காலம் துவங்கி இருப்பதால், அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-01-18 06:27 GMT
தேனி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமலையில், வரையாடுகளின் பிரசவ காலம் துவங்கி இருப்பதால், அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வரையாடுகளின் பிரசவ காலமான பிப்ரவரி 1 முதல் மார்ச் 31 வரை ஆகிய இரு மாதங்களில் மட்டும் இரவிகுளம் தேசிய பூங்கா அடைக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படும். இந்தாண்டு வழக்கத்தைக் காட்டிலும் முன் கூட்டியே வரையாடுகள் பிரசவிக்க துவங்கியது. இதையடுத்து இரவிகுளம் தேசிய பூங்கா 21 ம் தேதி முதல் மார்ச் 31 வரை அடைக்கப்படுகிறது. இதனால், ராஜமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளதாக மூணாறு வன உயிரின பாதுகாவலர் லட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்