திண்டுக்கல் அருகே அடுத்தடுத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் : பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றம்

திண்டுக்கல் அருகே அடுத்தடுத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பணம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் தப்பியோடினர்.

Update: 2019-01-13 07:56 GMT
திண்டுக்கலை அடுத்த வேடபட்டியில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து அருகில் உள்ள ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த அவர்கள் அங்கும் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். எனினும் அது நிறைவேறாததால், ஆத்திரமடைந்த அவர்கள் எதிரே உள்ள அடகுகடையின் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளனர். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால் கொள்ளையர்கள் தப்பியோடி விட்டனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். 3 இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை முயற்சியால்  அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்