நாகை கடல் பகுதியில் தினமும் ரோந்து பணி...
கடல்வழியாக தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க இந்திய கடற்படைக்கு இரண்டு புதிய அதிநவீன படகுகள் அர்ப்பணிக்கப்பட்டன.
கடல்வழியாக தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க இந்திய கடற்படைக்கு இரண்டு புதிய அதிநவீன படகுகள் அர்ப்பணிக்கப்பட்டன. நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மும்பையில் இருந்து கொண்டுவரப்பட்ட சாகர், பிரஹாரிபால் என்கிற இரண்டு புதிய ரோந்து படகுகளை நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் கடற்படையிடம் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் பேசிய தென் பிராந்திய கடற்படை கமாண்டர் ஸ்ரீவத்சவா, நாகை, காரைக்கால், கோடியக்கரை பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்த நாள்தோறும் ரோந்து பணி மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்.