3 மாதத்தில் 2 கோடி இலவச கேஸ் இணைப்பு - பாரத் பெட்ரோலியம் நிறுவனம்
மத்திய அரசின் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 92 சதவீதம் விநியோகிக்கப்பட்டு விட்டதாக பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 92 சதவீதம் விநியோகிக்கப்பட்டு விட்டதாக பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந் நிறுவனத்தின் மண்டல மேலாளர் செந்தில்குமார், இன்னும் 3 மாதத்திற்குள் தமிழகத்தில் 11 லட்சம் குடும்பங்கள் உள்பட நாடு முழுவதும் 2 கோடி குடும்பங்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்களுக்கான இணைப்புகள் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.