2 மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய சம்பவம்: 8 பெண், 8 ஆண் என 16 பேரும் குற்றவாளி

கடலூர் அருகே பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய சம்பவத்தில் 16 பேரும் குற்றவாளி என கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Update: 2019-01-05 02:31 GMT
கடலூர் அருகே பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய சம்பவத்தில் 16  பேரும் குற்றவாளி என கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 2 பேர் இறந்துவிட்ட நிலையில் 4 பேர் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கு கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த சம்பவத்தில் 8 ஆண், 8 பெண் என 16 பேரும் குற்றவாளிகளே என நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பு வழங்கினார். வறுமையில் இருக்கும் சிறுமிகளை இதுபோல் பாலியல் தொழிலில் தள்ளுவது வெட்கக் கேடான செயல் எனவும் நீதிபதி கருத்து தெரிவித்தார். குற்றவாளிகளுக்கு தண்டனை விபரம் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்