ஆசிரியர் கல்வியியல் பல்கலை. துணைவேந்தர் நியமனத்தை எதிர்த்து வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் தங்கசாமி நியமிக்கப்பட்டதை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-01-01 13:02 GMT
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் தங்கசாமி நியமிக்கப்பட்டதை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு விதிகளை பின்பற்றாமல் தங்கசாமி நியமிக்கப்பட்டுள்ளதாகவும், துணைவேந்தராக அவர் செயல்பட தடை விதிக்க கோரியும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த  சக்கரவர்த்தி என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, தமிழக அரசு, பல்கலைக்கழக மானியக் குழு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 2வது வாரத்திற்கு தள்ளிவைத்தது.
Tags:    

மேலும் செய்திகள்