"வட மாநிலங்களை விட தமிழகம் ஓங்கி நிற்கிறது" - கவிஞர் வைரமுத்து
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் கவிஞர் வைரமுத்துவுக்கு நேரில் வழங்கினார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் கவிஞர் வைரமுத்துவுக்கு நேரில் வழங்கினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் சிலையை பெற்று கொண்ட வைரமுத்து, திராவிட இயக்கங்களின் ஐம்பதாண்டு கால ஆட்சியில், தமிழகம் வட மாநிலங்களை விட ஓங்கி நிற்பதாக கூறினார். கருணாநிதியின் சிலை தனது மேஜையில் இடம்பெற போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.