இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் காலமானார்

சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் காலமானார்.

Update: 2018-12-06 02:06 GMT
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த ஆதிராம்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மாணவர்களில் இவரும் ஒருவர். 169 பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட பெருமைக்குரிய நெல் ஜெயராமன், மாநில, தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார். புற்றுநோயால் அவதியுற்ற அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று நெல் ஜெயராமன் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.  
Tags:    

மேலும் செய்திகள்